கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் மாநாடு கொழும்பில்!
Tuesday, July 25th, 2017
ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் 17வது கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.
கொழும்பில் ஆரம்பமான இந்த நிகழ்வில் ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எரீவன் ஹெவொரன்சியினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
இந்த மாநாட்டில் ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் மற்றும்; சர்வதேச பிராந்திய உறுப்பினர்கள், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பணிப்பாளர் நாயகம் கிங்ஸ்லி பெர்னாண்டோ, கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் மாநாட்டின் தலைவர் செய்ஜி டகாஜி, ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் பிரதி பொதுச் செயலாளர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Related posts:
புதிய அரசியலமைப்பு வெளிவரும்முன் பாதகம் என்று கூறுவதை ஏற்க முடியாது!
கிணற்றில் விழுந்து சிறுவன் பலி : பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் சம்பவம்!
சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி என்பன காணப்படுமாயின் வகுப்புகளுக்கு அனுப்புவதை தவிருங்க...
|
|
|


