கொரோனா தொற்றை மறைத்தால் கடும் சட்டநடவடிக்கை – பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

கொரோனா தொற்றை எவராவது மறைத்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்..
கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த தொற்றாளர்களின் தொடர்பாடல் வலையமைப்பு, அவர்களுடன் பழகியவர்களின் விபரங்களை சுகாதார அதிகாரிகளும் பொலிசாரும் வெளிப்படுத்தி அதனூடாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந் நிலையில், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், இந்த பணிகளுக்காக தொழிற்சாலைகளுக்கு, அதனுடன் தொடர்புபட்ட இடங்களுக்கு, வீடுகளுக்கு சென்று விடயங்களை கேட்கும் போது வெளிப்படையாக உண்மையான தகவல்களை வழங்க வேண்டும்.
அத்துடன் பொய்யான தகவல்களை வழங்குதலோ அல்லது தகவல்களை மறைப்பதோ பின்னர் விசாரணைகளில் தெரியவந்தால் அவசியம் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|