கொரோனா: தப்பிக்க மருத்துவ நிபுணர்கள் விடுக்கும் கோரிக்கை!

Sunday, April 5th, 2020

முகக்கவசம் அணிந்தால் கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக செக் குடியரசு வைத்திய நிபுணர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.

வீட்டை விட்டு வெளியே செல்வதென்றாலும், மக்கள் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதென்றாலும் கட்டாயம் முகக் கவசம் அணியுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

முகக் கவசம் அணிவது அத்தியாவசியம் இல்லை என உலக சுகாதார அமைப்பு இதற்கு முன்னர் அறிவித்தது.

எப்படியிருப்பினும் வைரஸ் வேகமாக அதிகரித்து வருவதனால் அந்த அமைப்பு தனது எண்ணத்தை மாற்றும் என ராஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர், வைத்தியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவுதற்கு பிரதான காரணம் அந்த நாட்டு மக்கள் முகக் கவசம் அணியாமையே என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கட்டாயம் முகக்கசவம் அணியுமாறு அமெரிக்க நோய் தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: