குடாநாட்டில் பொலிஸ் சைக்கிள் பாதுகாப்பு ரோந்து குழுக்கள்!

Monday, February 20th, 2017

குடாநாட்டில் குற்றச்செயல்களை தடுப்பதற்காக விசேட பொலிஸ் சைக்கிள் பாதுகாப்பு றோந்து குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் எல்லைப்பகுதியை உள்ளடக்கிய வகையில் இந்த சைக்கிள் பாதுகாப்பு றோந்து குழுவினர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட பொலிஸ் பிரதிமாஅதிபர் சங்சீவ தர்மரத்னவின் செயல்திட்டத்திற்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1487410766_unnamed

Related posts: