கிளிநொச்சியில் ஆர்பிஜி செல்கள் மீட்பு!
Friday, September 16th, 2016
கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்பிஜி செல்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்வம் தொடர்பாகத் தெரிய வருவதாவது நேற்று பிற்பகல் ஆறு முப்பது மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்பிஜி ரக செல்கள் மீட்கப்பட்டுள்ளது
இருப்பினும் இன்றையதினம் காலையே குறித்த காணியினுள் வேலைசெய்கின்ற ஒப்பந்தகாரரினால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் அத்துடன் மீட்கப்பட்ட ஒன்பது ஆர்பிஜி ரக செல்களும் பாவனைக்கு உதவாத நிலையில் இருப்பதாக கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Related posts:
யாழில் ரயில் விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
நிறைவடைந்தது வேட்பு மனுத் தாக்கல் - சஜித் விலகல் - மும்முனைப் போருக்கு தயாராகும் இலங்கை - புதிய ஜனா...
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கை வருவார் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெர...
|
|
|


