கல்கிஸை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் கைது!
Sunday, August 7th, 2016
கல்கிஸையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்கள், கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
19 மற்றும் 20 வயதான இந்த இரண்டு இளைஞர்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் கல்கிஸையில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபர்களான இந்த இளைஞர்களை கைதுசெய்துள்ளனர். ரி-56 ரக துப்பாக்கியொன்றையும் சந்தேகநபர்களிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த இருவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க கல்கிஸை நீதவான் நீதிமன்ற நீதவான் அனுமதி வழங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
சர்வதேச சான்றிதழ் பெறும் சுதேச கைத்தொழில் நிறுவனம்!
கொரோனா குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே பில் கேட்ஸ் வெளியிட்ட பரபரப்புத் தகவல்!
இன்று உலக தாய்மொழி தினம்!
|
|