கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!
Tuesday, January 23rd, 20182017 ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றிய ஜி.சி.ஈ உயர்தர மாணவர்களுக்கான இரண்டாம் மொழி (சிங்களம், தமிழ்) டிப்ளோமா மற்றும் அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மும்மொழி கற்கை நிலையத்தில் வார நாள்களில் வகுப்புக்கள் நடைபெறும். விண்ணப்பப் படிவத்தை இணையத்தில் பெற்று பூர்த்தி செய்து பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தலுடன் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பணிப்பாளர், மும்மொழிக் கற்கை நிலையம் (யாழ்ப்பாணம் கலட்டி மெதடிஸ்த மிஷன் த.க பாடசாலை, இராமநாதன் வீதி, கலட்டி) அனுப்பி வைக்குமாறும் மேலதிக விவரங்களுக்கு 021 223 1344 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம் அனுஸ்டிப்பு!
கொரோனா தடுப்பு நடமாட்ட கட்டுப்பாட்டு: உதவி தொகை பெற தகுதியுடைய அனைவருக்கும் கொடுப்பனவை வழங்குமாறு த...
அரிசிக்கான அபராதம் தொடர்பான அவசர சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப...
|
|