மலேரியாவை தடுக்கக்கூடிய தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு!

Wednesday, February 15th, 2017

முதன்முறையாக தற்போது மலேரியாவை தடுப்பதற்கு உத்தரவாதம் தரக்கூடிய தடுப்பு மருந்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த தடுப்பு மருந்தானது இரத்தத்திலுள்ள செங்குருதி சிறுதுணிக்கையினுள் செலுத்தப்படுவதன் மூலம் சிறப்பாக செயற்பட்டு மலேரியா காவிகளின் செயற்பாட்டை தடுக்கின்றது.

இதனை Wellcome Trust Sanger Institute ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடித்துள்ளனர்.

பிளாஸ்மோடியம் எனப்படும் காவி உயிரினத்தில் டஜன் கணக்கான இனம் காணப்படுகின்ற போதிலும் பிளாஸ்மோடியம் வைவக்ஸ் மற்றும் பிளாஸ்மோடிம் பஸிலிஃபோரம் என்பவற்றினாலேயே மலேரியா நோய் காவப்படுகின்றது.

இவற்றினால் தற்போது உலகளவில் 97 நாடுகளில் மலேரியா நோய் பரப்பப்பட்டுள்ளது எனவும் இவ்வாறு நோய்த்தாக்கத்திற்கு உள்ளானவர்களில் அதிகளவானவர்கள் 15 வயதிற்கும் குறைந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் என அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

25-1366892826-masquitos-12-600

Related posts: