கணவன் தாக்கியதால் மனைவி பலி!
Saturday, September 3rd, 2016
கோப்பாய், கலையடி பிரதேசத்தில் கணவன் மேற்கொண்ட தாக்குதலில் மனைவி உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக மனைவியை பொல்லால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். திரிநெவேலி, கலையடி வீதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த கணவன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts:
சிறப்பு அமைச்சரின் அதிகாரத்திற்கு முதலமைச்சர்கள் எதிர்ப்பு!
இலங்கையின் நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் ஐ.நா மனித ...
யாழ் கோட்டை பகுதியை சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கு புதிய திட்டங்களை வகுக்குமா...
|
|
|


