கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரயில் விபத்துக்களில் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
Wednesday, December 21st, 20162016ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ரயில் விபத்துக்களில் 347 பேர் உயிரிழந்துள்ளனர் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
பயணித்து கொண்டிருக்கும் ரயிலில் இருந்து விழுந்தமையினால் ஏற்பட்ட விபத்தில் இதுவரையில் 58 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதையில் இடம்பெற்ற விபத்தில் 14 பேரும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர்களில் 31 பேரும் இதில் அடங்குவர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் ரயில் விபத்துக்களில் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தொலைபேசி பாவனையினால் ஏற்பட்ட விபத்துக்களே அதிகமாக உள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இயற்கை அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்றில் அவசர கூட்டம்!
அனர்த்தத்தினால் கடவுச் சீட்டினை இழந்தவர்கள் சந்தர்ப்பம்!
அரச மருத்துவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு – சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!
|
|