ஒரு நாளில் 83 மில்லியன் ரூபா வருமானம்!
Wednesday, May 3rd, 2017
உலக தொழிலாளர்கள் தினத்தன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு 83 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் இதில் அரசியல் கட்சிகளுக்காக வழங்கப்பட்ட பஸ்களில் மாத்திரம் 58.6 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் பொதுவான பயண நடவடிக்கைகளிலும் கருத்திற் கொள்ள கூடிய வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொதுவாக அரசாங்க விடுமுறை நாட்களில் அல்லது ஞாயிறு தினங்களில் தங்கள் தினசரி வருமானம் 68 மில்லியன் ரூபாய் எனவும் இம்முறை பாரிய அதிகரிப்பு ஒன்று காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே தின பேரணிக்காக இம்முறை வழங்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை மற்றும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதற்கமைய இந்த அதிக வருமானம் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Related posts:
சமாதானத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நடைபவனி!
தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யப் பிரஜைகள் இன்று விடுதலை!
கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்த தடையுத்தரவு காலம் நீடிப்பு..
|
|
|
இராணுவத்தினரே பல்கலைக் கழக மோதல் சம்பவங்களுக்கு காரணம் - சொல்லுகின்றார் சுரேஷ் பிரேமச் சந்திரன்!
வெளி மாகாணமொன்றில் உயிரிழந்த முதியவரின் உடலை உரிய அனுமதிகளின்றி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டதால...
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 56 ஆயிரம் கடவுச்சீட்டு விநியோகம் - குடிவரவு மற்றும் குடியகல்வுத் திண...


