ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையும்!
Tuesday, January 16th, 2024ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதேநேரம் நாடாளுமன்றம் இம்மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் கடைசியாக கூடவுள்ளது.
இம்மாதம் 25 ஆம் திகதி வியாழன் போயா விடுமுறை என்பதால் அந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும்.
இதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி நள்ளிரவில் நாடாளுமன்ற அமர்வு முடிவடைவதற்கான வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கோப், கோபா உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குழுக்கள் இரத்து செய்யப்பட்டு, அதன்படி அந்த குழுக்கள் அனைத்தும் மீண்டும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பதவிக்காலம் முடிவடைவதால் உயர் அதிகாரிகள் குழு, துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் சிறப்புக் குழுக்கள் மட்டுமே ஒழிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு 9 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|