ஐ. நா. சபையின் விசேட அறிக்கையாளர் இலங்கை விஜயம்!
Friday, August 5th, 2016ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசாக் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி இலங்கை விஜயம் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள இவர் 20 ஆம் திகதி வரை தங்கியிருந்து இலங்கை நிலமைகள் குறித்து ஆராயவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரான இவர் இலங்கை தொடர்பான பல்வேறு தகவல்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பித்ததாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே சிறுபான்மை மக்கள் தொடர்பான விசேட சிறப்பு அறிக்கையாளர் றீட்டா ஐசாக் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அத்துடன் றீட்டா ஐசாக் சமர்ப்பித்திருந்த அறிக்கையில் பல தவறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அரசாங்கம் அது தொடர்பில் விளக்கம் கோருவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Related posts:
வடமாகாணத்தில் இயங்கிவரும் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழான வைத்தியசாலைகளின் பெயர்கள் மாற்றம்!
கண்ணி வெடி எதிர்ப்பு சாசன விசேட தூதுவர் இலங்கை விஜயம்!
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில்தாளமுக்கம் - கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை அ...
|
|