ஐஸ்கிறீம் விற்பனையாளர்களுக்கு அபராதம்!
Tuesday, March 29th, 2016சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில், ஐஸ்கிறீம் விற்பனை செய்த இருவருக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எ.எம்.எம்.றியால் நேற்று (28) தீர்ப்பளித்தள்ளார்.
சுகாதார பரிசோதகர் பி.சஞ்ஜீவன், கடந்த ஞாயிற்றுக்கிழமை(27) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சுகாதாரமற்ற முறையில் ஐஸ்கிறீம் விற்பனை செய்த வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஐஸ்கிறீம் வானின் சாரதிக்கும் விற்பனையாளருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு அபராதம் விதித்தார்.
Related posts:
புகையிரத ஓட்டுனர்களாக இராணுவத்தினரை பயிற்றுவிக்க அனுமதி!
கொரோனா தொற்று அதிகரிப்பு: 2 ஆயிரம் நோயாளர்களை எதிர்கொள்ள தயாராகும் இலங்கை!
373 கடற்படையினருக்குக் கொரோனா தொற்று: 14 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைவு - கடற்படை ஊடகப்பிரிவு!
|
|