எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவம் – இராணுவத் தளபதி அறிவிப்பு!

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் எரிபொருள் பௌசர்கள் உரிய முறையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை வந்தடைகின்றனவா என்பதைப் பரிசோதிப்பதற்காகவே இந்த கண்காணிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட பணிப்புரைக்கு அமைய இராணுவம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Related posts:
மக்களது அபிலாஷைகளை வென்றெடுக்க நாம் என்றும் உறுதியுடன் உழைப்போம் -ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட மேலதிக ...
இந்திய கடற்றொழிலாளர்களுடன் தொடர்பு - அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம் - காரைநகர், அனல...
“லாம்ப்டா” வைரஸ் – இலங்கையும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமென எச்சரிக்கிறது சுகாதார அமைச்சு!
|
|