எச்சரிக்கை! நாட்டில் பலமான காற்று வீசும்! – வளிமண்டலவியல் திணைக்களம்!
Wednesday, August 17th, 2016நாட்டைச் சுற்றியுள்ள கடற் பிரதேசங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இக்காலப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமை காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கடும் அவதானத்துடன் இருக்குமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தரைப்பிரதேசத்தில் திடீரென கடும் காற்று வீசக்கூடும் என்றும் இன்று வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சில பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம் உள்ளதாகவும் இந்த நிலை நாளை வரை நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
நெல் உற்பத்தி செய்தால் மட்டும் பேதாது :உப உணவுச் செய்கையிலும் ஈடுபடுங்கள் - கிளிநொச்சி மாவட்ட அரச அ...
இ.போ.ச. 749 வழி இலக்க பேருந்துச் சேவை நிறுத்தம் - மக்கள் குற்றச்சாட்டு!
உயர்தர மாணவர்களுக்கான தொண்டமனாறுப் பரீட்சைகள் நாளை ஆரம்பம் – சகல மாணவர்களையும் பரீட்சைக்கு தோற்றுமாற...
|
|