உரம் விநியோகிக்க விரிவான நடவடிக்கை – தேசிய உர செயலகம்!
Thursday, January 4th, 2018உரத்திற்கு தட்டுப்பாடு நிலவும் பிரதேசங்களை இனங்கண்டு உரிய பகுதிகளுக்கு தேவையான உரத்தை விநியோகிக விரிவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யூரியா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் தனியார் துறையிடமிருந்து யூரியா பெற்றுக் கொள்ளப்படவிருக்கிறது. 40 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் விரைவில் இலங்கையை வந்தடையவிருக்கிறது. என்று தேசிய உர செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமையஇ பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு உரம் கிடைக்கவிருக்கிறது. பெரும்பாலான விவசாயிகளுக்கு தேவையான உரம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்போக உரத்திற்கென இதுவரை ஏழு தசம் ஐந்து பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக தேசிய உர செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ் மாவட்டத்திலுள்ள சிறுகுளங்களை புனரமைக்கும் திட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கு...
ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுத்துள்ள முடிவு!
வீட்டுத்தோட்டங்களை நிர்மாணிக்கும் செயற்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு!
|
|