உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்துவதற்கான நேர்முகப் பரீட்சை!

Monday, March 15th, 2021

தகுதி பெற்ற 209 பிரதான பொலிஸ் பரிசோதகர்களை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்துவதற்கு இம்மாதத்திற்குள் நேர்முகப் பரீட்சை நடத்தப்படுமென அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொலிஸ் துறையில் தீர்க்க வேண்டிய பல சிக்கல்கள் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று பதவி உயர்வு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்

Related posts: