உணவுக்கான வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

Tuesday, December 13th, 2016

உணவுக்கான வேலைகள் திட்டத்தினை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் வடமராட்சிப் பகுதிகளில் சிறு வீதிகளை மூடியுள்ள பற்றைகள் அழிக்க முடியும் என பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுக்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் வீதிகள், பொத இடங்கள் என்பன துப்பரவு செய்யப்பட்டு வந்தன. வேலை செய்யும் நாட்களிற்கான உணவுக்கான பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் அத நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறிய வீதிகள் ஒழுங்கைகள் என்பன பற்றைகள் வளர்ந்து காடாக காட்சி அளிக்கின்றன. எனவே மீண்டும் உணவுக்கான வேலைகள் திட்டத்தை நடைமுநைப்படுத்திளால் கிராமங்கள் அழகு பெறுவதுடன் மக்களிற்கு உணவுக்கான பொரட்களு; கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

2891

Related posts: