இலவச தெளிவூட்டல் செயலமர்வு!

Tuesday, May 8th, 2018

தென்மராட்சி கல்வி வலய 1ஏபி பாடசாலைகளில் 2019 ஆம் ஆண்டு ஜி.சி.ஈ. உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள கணித விஞ்ஞான வகுப்பு மாணவர்களுக்கான இலவச தெளிவூட்டல் செயலமர்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு யாழ். போதனா மருத்துவமனைக்கு முன்பாக உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி பட்டப்படிப்புகள் அலகு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

2017 ஆம் ஆண்டு தொடக்கம் அமுலாகும் மறுசீரமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் தொடர்பாக தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணக் கல்லூரியின் பட்டப்படிப்புகள் அலகினால் செயலமர்வு நடத்தப்பட்டு வருகிறது.

செயலமர்வில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களும் துறைசார் சிறப்பு வளவாளர்களும் கலந்துகொண்டு செயலமர்வினை நடாத்திவருகின்றனர்.

இந்த செயலமர்வில் தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் கலந்துகொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவம் அறிவித்துள்ளார்.

Related posts: