இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளரை டில்ருக்ஷிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
Tuesday, October 18th, 2016
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி, சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்லவது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பொதுப் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸை இம்மாதம் 20 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி, சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்ல நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார். இந்த கோரிக்கைக்கு இணங்கவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பொதுப் பணிப்பாளரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் வீழ்ந்த மர்மபொருளால் குழப்பம்!
சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் நிராகரிக்கவில்லை - ஊடகத்துறை அமைச்சர்...
வெளிநாட்டில் தொழில் புரியம் இலங்கையர்களால் இலங்கைக்கு கிடைக்கும் டொலர்களின் தொகை அதிகரிப்பு!
|
|