இலங்கையில் பாகிஸ்தான் வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்!

Saturday, January 13th, 2018

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாகிஸ்தான் வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இதன் நோக்கம் பாகிஸ்தானிலுள்ள தயாரிப்புக்களையும் சேவைகளையும் இலங்கை மக்களுக்கு காட்சிப்படுத்துவதேயாகும்.

இந்த கண்காட்சியில் பொறியியல் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் ஆடைத்தொழிற்துறை  உடுதுணி கைப்பணி அலங்கார பொருட்கள் மருந்து வகைகள்உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட பொருட்களை பொது மக்கள் பார்வையிட முடியும்

Related posts: