இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 2,814 பேர் மரணம்!
Friday, June 25th, 2021
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 800 ஐ கடந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 23 ஆம் திகதி 45 கொவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது.
அதனடிப்படையில் பதிவான கொவிட் மரணங்களுள் 30 வயதுக்குக் குறைவான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேநேரம் 30 முதல் 59 வயதுக்கிடையில் 2 பெண்களும், 8 ஆண்களுமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 60 வயதுக்கு மேல் 15 பெண்களும், 19 ஆண்களுமாக 34 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை போர்க்கொடி!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை மீறி மக்கள் நலனை நிறைவேற்றியது ஈ.பி.டி.பி. - வவுனியா மக்கள் நன...
இலங்கைக்குள் நுழைய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
|
|
|


