இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
Wednesday, October 5th, 2016
அமெரிக்காவில் நிரந்தர வதிவிட உரிமை (கிறீன் கார்ட்) வழங்குவதற்கு 50,000 பேரை தெரிவு செய்வதற்கு இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு வருடாந்தம் பல நாடுகளை சேர்ந்த 50,000 பேரை லொத்தர் குலுக்கல் முறையில் தெரிவு செய்து நிரந்தர வதிவிட உரிமை வழங்கி வருகிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் இதற்காக வருடாந்தம் லொத்தர் குலுக்கல் நடைபெற்று வருகின்றதுடன், Diversity Visa Program எனும் இந்தக் குழுக்கள் முறையில் விண்ணபிப்பதற்கு இலங்கையர்களும் தகுதியுடைவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் அமெரிக்க வதிவிட உரிமை பெறுவதற்கான DV-2018 குலுக்கல் திட்டத்துக்கு அமெரிக்க நேரப்படி இன்று ஒக்டோபர் 4ஆம் திகதி நண்பகல் முதல் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க கால வரையறை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் www.dvlottery.state.gov எனும் இணையத்தளத்தின் மூலம் மாத்திரமே இதற்காக விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியும் என அறிவித்தல் விடப்பட்டுள்ளது.
இவ்விண்ணப்பத்துக்கு கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது எனவும் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அமெரிக்க தூதரகம் மேலும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|