இராணுவ வீரர் பலி!
Monday, September 19th, 2016
மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குளம் பாலிநகர் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் பத்தாவது காலாட்படை முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு, நேற்றுமுன்தினம் (18) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மாத்தறை மாவட்டம், வில்கடுவ என்ற இடத்தைச் சேர்ந்த டி.ஏ.ஏக்கநாயக்க (வயது 30) இராணுவ வீரரே தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மேற்படி இராணுவ முகாமின் இராணுவத்தினரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு இராணுவத்தினர் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts:
வெவ்வேறு விலையில் அரிசி விற்பனை செய்ய முடியாது – பாவனையாளர் அதிகாரசபை தெரிவிப்பு!
இத்தாலி பயணமானார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச – பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இராஜதந்திர சந்திப்புகளிலும...
எரிவாயு சிலிண்டர்கள் குறித்து விசேட பரிசோதனை - அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!
|
|
|


