இரண்டாவது இருதய மாற்று சத்திர சிகிச்சையும் வெற்றி!

Thursday, September 28th, 2017

இலங்கையின் இரண்டாவது இருதய மாற்று சத்திர சிகிச்சையும் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அமைச்சரவை துணை பேச்சாளரும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மனிநேயத்திற்கு முன்னுரிமையளித்து மேற்கொண்ட டாக்டர்களையும் அமைச்சர் பாராட்டினார். விசேட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழாமின் அர்ப்பணிப்புக் காரணமாக வெற்றி சாத்தியப்பட்டதென்றும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தொவித்தார்.

இந்தச் சத்திர சிகிச்சை கடந்த செவ்வாய்க்கிழமை  8.00 மணி தொடக்கம் புதன் கிழமை அதிகாலை 5.00 மணி வரை நீடித்தது. கண்டி போதனா வைத்தியசாலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் முதலாவது சத்திர சிகிச்சை இடம்பெற்றமையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்..

Related posts: