இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூரில் இலவச யோகாசன மற்றும் தியான வகுப்புக்கள்!
Tuesday, January 17th, 2017
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலவச யோகாசன மற்றும் தியான வகுப்புக்களின் புதிய பிரிவு எதிர்வரும்-21 ஆம் திகதி சனிக்கிழமை காலை-06.30 மணிக்கு நல்லூர் ஆறுமுக நாவலர் மணிமண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.
சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை-06.30 மணி முதல் 07.30 மணி வரை ஆண்கள் பிரிவிற்கும், காலை-07.30 மணி முதல் காலை-08.30 மணி வரை பெண்கள் பிரிவிற்கும் தனித்தனியே இலவசமாக இந்த வகுப்புக்கள் நடாத்தப்படவுள்ளன.அத்துடன் நோயாளர்கள் மீது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளன.
சுமார் மூன்று மாத காலப் பயிற்சி நெறியைக் கொண்ட இந்தக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்பவர்களுக்குப் பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
Related posts:
இலங்கை வழியாக சீனாவுக்கு கடல் அட்டை அனுப்பியவர் கைது!
இலங்கை நாடாளுமன்றத்திற்குள் வெள்ள அபாயம்!
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகளுக்கு தடை – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்...
|
|