இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிளகு ஏற்றுமதியை அதிகாரிப்பதற்கான கலந்துரையாடல்!

Friday, August 9th, 2019

இலங்கையில் இருந்து மிளகு ஏற்றுமதியை அதிகாரிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெறவுள்தாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கின்ற மிளகிற்கான விலையை சீராக்குவது சம்மந்தமாக தாம் அந்த நாட்டின் விவசாயத்துறை அமைச்சருடன் கலந்துரையாடவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அவர் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்கிறார். இலங்கை – இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின்படி இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வரிவிதிப்பனவுகள் அல்லாது மிளகு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: