இதயங்களை வாக்குச் சீட்டில் வரைந்து வாக்களித்த இலங்கைப் பிரஜைகள்!
Thursday, February 15th, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பல வாக்குச் சீட்டுக்களில் இதயங்கள் வரையப்பட்டிருந்தன என்று தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கட்சியும் தத்தமது கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு தெரிவித்தனவே தவிர எந்தக் கட்சியும் வாக்குச் சீட்டில் புள்ளடியிடுவது தொடர்பில் தெளிவாகசொல்லவில்லை. இவர்களின் இந்தத் தவறுகளினாலேயே இது நிகழ்ந்துள்ளது.
மேலும் தேர்தல் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தாமதமானது தமிழ் மற்றும் சிங்கள மொழி தெரிந்த அதிகாரிகளின் பற்றாக்குறையே என அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
இலங்கைக்கு மேலும் ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள்!
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!
அடுத்த வருடம்முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையலாம் - அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை...
|
|
|


