இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்ட பின் பேருந்து சேவை சீராகும் !

Friday, March 23rd, 2018

இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகின்றது அதன் பின்னர் போக்குவரத்து சீராக இடம்பெறும் என தனியார் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வி.பத்மநாதன் தெரிவித்தார் மருதங்கேணிப் பிரதேச செயலக ஒருங்கினைப்புக் குழுக்கூட்டம் அண்மையில் இடம் பெற்றது .

இதன்போது போக்குவரத்துத் தொடர்பான விடயம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது தனியார் போக்குவரத்துத் துறையினர் சீராக சேவையில் ஈடுபடுவதில்லை என பொதுமகன் ஒருவரால் சுட்டிக்காட்டப்பட்டது இதன்போது தனியார் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளரான வி.பத்மநாதன் கருத்து வெளியிடப்பட்ட போது : இ.போ.சபை மற்றும் தனியார் போக்குவரத்து சபையினர் ஆகியோரிற்கான இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்படுகின்றது .

அதாவது 60:40 என்ற விகிதத்தில் அது தயாரிக்கப் படுகின்றது அதன் பின்னர் சீரான போக்குவரத்து இடம் பெறும் எனத் தெரிவித்தார்.

Related posts:

சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி - சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்த...
இலங்கையில் திரிபடைந்த கொரோனா வைரஸ் - கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் மகப்பேறியல் ந...
நாட்டில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால் ஓர் அலகுக்கு 59 ரூபா அறவிட நேரிடும் - மானியம்...