இடம்பெயர்வு தொடர்பாக தேசிய கொள்கை!

Thursday, August 18th, 2016

யுத்தத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வுக்காக நீடிக்கக்கூடிய தீர்வொன்றினை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனரமைப்பு, மீள் குடியேற்ற மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மோதலினால் ஏற்பட்ட இடம்பெயர்வுக்காக நீடிக்கக்கூடிய தீர்வொன்றினை பெற்றுக் கொடுப்பதற்கான அவசியத்தை உணர்ந்து பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி தேசிய கொள்கை தயாரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: