ஆலய புனரமைப்பிற்கு உதவி கோரி ஈ.பி.டி.பி. கட்சியிடம் மகஜர் கையளிப்பு!

Sunday, March 13th, 2016
அரியாலை ஸ்ரீகௌரி கண்ணகை அம்மன் ஆலய நிர்வாகத்தினர் ஆலய புனரமைப்பு மேற்கொள்ள உதவி கோரி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கடந்த 10 ஆம் திகதி ஆலய  முன்றலில் நடைபெற்ற கூட்டமொன்றில்  நல்லூர் தொகுதி இணைப்பாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.
இச் சந்திப்பில் ஆலயத்தின் நிர்வாக தலைவர் இ.ஜெயபிரகன் மற்றும் செயலாளர் த.நாகரத்தினம் பொருளார் திருதி.லதா ஆகியோருடன் ஆலய நிர்வாகத்தினரும் உடனிருந்தனர்.

Related posts: