ஆயுள்வேத மருத்துவமனையை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை!
Sunday, February 3rd, 2019
நவாலி ஆயுள்வேத இலவச மருத்துவமனையின் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவேறியுள்ளன. வலி.தென்மேற்கு நோயாளர்களின் நலன்கருதி வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் மருத்துவமனையை மீள ஆரம்பித்து உதவ வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நவாலி ஹேமலதா ஞாபகார்த்த ஆயுள்வேத மருத்துவமனை சீரமைப்புப் பணிகள் காரணமாக 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி முதல் மருத்துவ சேவையை இடைநிறுத்தியிருந்தது. மாகாண ஆணையாளரின் அறிவித்தலுக்கு அமைய மீள் சீரமைப்புப் பணிகள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளன.
வடமாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் நோயாளர்களின் நலன்கருதி ஆயுள்வேத மருத்துவமனையை மீள ஆரம்பித்து உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
மானிப்பாய் வைத்தியசாலை விஸ்தரிப்பு: காணி கொள்வனவிற்கு மக்கள் உதவி தேவை – நோயாளர் நலன்புரி செயலாளர்!
நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பில் அடுத்தவாரம் முடிவு!
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்நதியா சென்றடைந்தார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச !
|
|
|


