ஆனைக்கோட்டையில் அரசமரம் திடீரெனச் சரிந்து முறிந்ததில் முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயம்
Thursday, May 11th, 2017
யாழ். ஆனைக்கோட்டை அரசடி புளியங்கன்றுப் பிள்ளையார் ஆலய வீதியில் நின்றிருந்த அரசமரம் திடீரெனச் சரிந்து முறிந்ததில் முச்சக்கரவண்டிச் சாரதியொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை(10) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் முச்சக்கர வண்டி கடுமையாகச் சேதமடைந்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த மேற்படி சாரதி பொதுமக்களால் மீட்கப்பட்டுச் சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
வலிகாமம் பகுதியில் மழை!
மாத்திரையைப் போதையாக பயன்படுத்திய விவகாரம் - பிராந்திய மருந்தகங்களிலேயே மாணவர்களுக்கு விற்கப்பட்டன!
இளைஞர்களின் தொழிலின்மையை நிறைவு செய்ய இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்...
|
|