ஆண்டு இறுதிவரை பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!
Monday, October 18th, 2021இந்த ஆண்டின் இறுதி வரை அத்தியாவசியமற்ற பயணங்களை கட்டுப்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
அன்றாடம் சுமார் 700 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருவதாகவும், எனவே இது போன்ற சூழ்நிலைகளில், அத்தியாவசியமற்ற பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேநேரம் உறவினர்களைப் பார்க்கவோ அல்லது சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுவதற்கோ இது ஏற்ற காலம் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர் நாட்டில் வழமையான செயற்பாடுகளை படிப்படியாக முன்னெடுப்பதற்காக புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த வழிகாட்டுதல்களுக்கு அமைய செயற்பட்டு பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுயள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
காணாமல் போனோர் விசாரணைகள் நிறைவு.!
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இன்று(05)!
12 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு!
|
|