ஆணைக்குழுவின் பணிகளில் தடங்கல் இல்லை!

Saturday, October 29th, 2016

இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் வழமையான பணிகள் எவ்வித தடங்கலுமின்றி நடைபெற்று வருவதாக அந்த ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் சுனேத்ரா ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க பதவி விலகியதையடுத்து ஓரிரு தினங்களுக்கு சற்று தடைப்பட்டிருந்த பணிகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியிருப்பதாகவும் விசாரணைகள் தொடர்ந்தும் நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

bribery-commission

Related posts: