ஆசிரிய ஆலோசகர் சங்க விசேட பொதுக்கூட்டம்
Friday, March 11th, 2016வட மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கப் பொதுக்கூட்டம் நாளை சனிக்கிழமை (12) காலை 9 மணிக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாகக்குழுவினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர்களின் நிலை குறித்து கலந்துரையாடுவதுடன் வடமாகாணத்தில் தற்போது கடமையில் உள்ள ஆசிரிய ஆலோசகர்களது விபரங்களையும் திரட்டிச்செல்லவுள்ளனர்.
எனவே, வட மாகாணத்திலுள்ள பன்னிரெண்டு கல்வி வலயங்களிலும் கடமையாற்றும் அனைத்து ஆசிரிய ஆலோசகர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு வடமாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
புகையிரத நேர அட்டவனையில் மாற்றம்!
மின்சார தடை - 8 மணித்தியாலத்தில் 100 கோடி ரூபாய் நட்டம் - இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை - போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
|
|