ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருங்கள் – கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு!

Sunday, February 28th, 2021

நீண்ட காலமாக பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற ‘கிராமத்துடன் உரையாடல்’ 12 ஆவது நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நியமனம் வழங்கப்பட்ட அதே பாடசாலையில் எட்டு வருட சேவையின் அடிப்படையில் சில பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கும் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் காணப்படும் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணினி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களின் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப அடுத்த வாரம் விண்ணப்பங்களை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  “பயிர் செய்கையை விரிவுபடுத்த அதிக நிலம் தேவையாக உள்ளதால் விவசாயத்திற்கு பொருத்தமான நிலங்களை விரைவாக அடையாளம் காண வேண்டும் என தெரிவித்துள் ஜனாதிபதி விளைச்சலை அதிகரிக்க காணிகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதும் முக்கியமானதாகும் என்பதுடன் இந்த நோக்கத்திற்காக, நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த விவசாயிகளுக்கு உதவுங்கள் ”என்று வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் சமூகத்தின் மிகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100,000 பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் வறுமையை ஒழிக்கும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அத்துடன் தொழில் பெறுவோர்களுக்கு ஒரு துறையில் மட்டும் வரையறுக்கப்படாத பல்நோக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏழ்மையான குடும்பங்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தை சீர்குலைக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வெளிநாடுகளுடன் ஒப்பீடு செய்கையில் இலங்கையில் கொவிட் கட்டுப்பாடு சிறந்த முறையில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: