ஆசிரியரைத் தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் அபகரிப்பு  – கே.கே.எஸ் வீதியில் நேற்றுப் சம்பவம்!

Wednesday, March 7th, 2018

நாச்சிமார் கோவில் பகுதியில் ஆசிரியர் ஒருவரை கடுமையாகத் தாக்கிய ரவுடிக் கும்பல் ஒன்று அவரது 3 லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சயிக்கிளை அபகரித்துக் கொண்டு தப்பியோடினார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

காங்கேசன்துறை வீதி – நாச்சிமார் கோவில் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை சன நடமாட்டம் அதிகமாக இருந்த நேரம் இவ்வாறு ரவுடிகள் அட்டகாசம் புரிந்துள்ளனர்

ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த எஸ். நிரோஜன் (வயது -23 ) என்ற ஆசிரியரின் மோட்டர் சைக்கிளே அபகரிக்கப்பட்டுள்ளது. வீதியில் நின்று சக நண்பர் ஒருவருடன் இந்த ஆசிரியர் கதைத்துக் கொண்டிருந்துள்ளார். இதன் போது இரண்டு மோட்டர் சைக்கிளில் கறுப்பு நிற தலைக்கவசம் அணிந்து முகத்ததை மறைத்தவாறு வந்த ஜவர் இவரைத் தாக்கியுள்ளர் .

தாக்குதலில் நிலை குலைந்த ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ரவுடிகள் தப்பியோடியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த ஆசிரியர் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்ப பட்டுள்ளார்.

Related posts: