ஆசிரியரின் வீட்டில் நகை திருட்டு!
Thursday, November 17th, 2016
அச்சுவேலியில் ஆசிரியர் வீடு புகுந்த திருடர் சுமார் 14லட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாகப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திருட்டு அச்சுவேலி மேற்கில் நேற்றுப் பகல் இடம்பெற்றது. வீட்டில் ஆள்கள் இல்லாத நேரம் திருட்டு இடம்பெற்றது. வீட்டுக்காரர் வீடு திரும்பிய போதே சம்பவம் தெரியவந்தது. அது தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டது. எவரும் கைது செய்யப்படவில்லை. எனினும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது
Related posts:
விரைவில் மருந்து வகைகளின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன...
வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகள் தொடர்பில் வெளியானது விசேட அறிவிப்பு!
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான பிரேரணை அமைச்சர...
|
|