ஆங்கிலமொழி உயர்தர கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம்!
Friday, November 10th, 2017
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தால் உயர் தொழில்துறை தொடர்பாடலுக்கான ஆங்கில மொழி உயர்தரச் சான்றிதழ் கற்கைநெறி 2017/2018 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்தக் கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயதை பூர்த்தி செய்திருப்பதுடன் க.பொ.த சாதாரணதரத்தில் ஆறு பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
இந்தக் கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கவிருக்கும் விண்ணப்பதாரிகள் www.ou.ac.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் யாழ்ப்பாணப் பிராந்திய நிலைய உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
Related posts:
ஒரு நாள் சேவையின் கீழ் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல...
கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களுக்கு இலங்கை த...
மனித உடலில் உணரப்படக் கூடிய எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிக வெப்பநிலை - வளிமண்டலவியல் திணைக்களம் எ...
|
|
|


