இன்றுமுதல் அனைத்து வகையான சிகரட் வகையும் விலை உயர்வு !
Tuesday, November 1st, 2016அனைத்து வகையான சிகரட் விலைகளும் குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் ரூபாய் 10 வரை இன்று(01) முதல் அதிகரிப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள வற் வரி காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி அதிக நுர்வுடைய சிகரட் ஒன்றின் விலை 50 ரூபாய் என இலங்கை புகையிலை நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சிகரட் உற்பத்தி வரி அண்மையில் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு இந்த விலை அதிகரிப்பின் மூலம் புகைபிடிப்பவர்களது எண்ணிக்கையை குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது புகை பிடிப்பவர்களுக்கு அதன் மீது வெறுப்பு வர வேண்டும் என்பதற்காகவே அதன் விலையை அதிகரித்துள்ளோம் என ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுற்றுலாப் பயணிகள் சுகாதார சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் - அரச வைத்தியர் சங்கம்
ஆசிரியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம்!
டொலர் நெருக்கடிக்கு நாங்கள் காரணமில்லை - மக்களிற்கு ஜனநாயகத்தை உறுதி செய்யும் விதத்திலேயே ஆட்சிசெய்க...
|
|