அதிபர் வெற்றிடத்தை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஓய்வு நிலை வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்கினேஸ்வரன்

Thursday, December 7th, 2017

பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் ஏற்படும்போது மறுநாளே பொருத்தமான அதிபரை நியமிப்பதற்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓய்வு நிலை வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்கினேஸ்வரன்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாங்கள் பதவியில் இருந்த காலத்தில் பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் ஏற்படும் போது விரைவாக அதிபர்களை நியமித்தோம். இன்று தேசிய பாடசாலைகளில் கூட பொருத்தமான அதிபர்கள் நியமிக்கப்படுவதில்லை.

இந்த விடயத்தில் மாகாண சபை உறுப்பினர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ அக்கறை செலுத்த வேண்டும். திறமைமிக்க அதிபர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடசாலை நிர்வாகத்தில் பெற்றோர், பழைய மாணவர்கள் அதிபர்களுக்குத் தலையிடியைக் கொடுக்கக் கூடாது. அதிபர்களின் வினைத்திறனான செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

Related posts: