அச்சுவேலியில் ஒரேநாளில் 10 பேர் கைது!

Wednesday, October 19th, 2016

அச்சுவேலிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நேற்றையதினம் ஒரே நாளில் 10பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அச்சுவேலி பொலிஸ் பிரிவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நீதிமன்ற நடவடிக்கைகளின் தவணைகளுக்கு சமுகமளிக்காதமையால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள். இவ்வாறு கைது செய்யப்பட்ட 10பேரும் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

arrest_07

Related posts: