வெடுக்குநாறி விவகாரத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, April 2nd, 2023


……….
நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும் சந்தப்பட்டவர்களுடன் சமூகமான கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் ஊடாகவும் வெடுக்குநாறி விவகாரத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று வெடுக்குநாறி மலையில் வைத்து அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஒத்துழைப்புக்களை வழங்குகின்ற ஜனாதிபதிக்கு நன்றி கூறுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர்,  நெடுங்கேணி, வெடுக்குநாறி ஆதிசிவன் லிங்கேஸ்வர் ஆலயத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்

இந்த விஜயத்தில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: