வீதி திருத்த அறிவிப்புகள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 8th, 2017

வீதி திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு பகுதிகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கோரப்படும் அறிவிப்புகள் தனிச் சிங்கள மொழியினில் மாத்திரமே காட்சிப்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக, கொழும்பு போன்ற பிரதான நகரங்களிலும் இந்த நிலையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சைகைகள் கூட இல்லாத இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிங்கள மொழி மூலப் பரிச்சயமற்றவர்களால் வீதி ஒழுங்கு மீறல்களுக்கான வாய்ப்புகள் ஏராளம்.

இது குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் உரிய அவதானம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

Parliament-of-srilanka-1024x683 copy

Related posts:

வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது எப்போது? ...
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு - அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனித நேயத்துக்கு சாந்தனின் உறவுகள் நேரில் சென்று நன்றி தெரிவிப்பு!

கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் - மாணவர் போராட்ட...
நந்திக்கடல் பிரதேசத்தை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதார பாதிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்...
“மக்களே நாம், நாமே மக்கள், மக்கள் வேறு நாம் வேறல்ல” - கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!