விசாரணைகள் தமக்கு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை – சிவபுரம் கிராம மக்களின் சமூகப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துரைப்பு!
Friday, January 21st, 2022
சட்ட விரோதச் செயற்பாடுகளின் காரணமாக கடந்த ஒரு வருடத்தினுள் ஐந்து கொலைகள் இடம்பெற்ற பரந்தன், சிவபுரம் கிராம மக்களின் சமூகப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது, அண்மைக்காலத்தில் இடம்பெற்ற கொலை தொடர்பான விசாரணைகள் தமக்கு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை என்று பிரதேச மக்களினால் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிவபுரம் கிராமத்தில் பொலிஸ் காவலரண் அமைப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்ட அமைச்சர், சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்து விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு ஆலோசனை வழங்கினார்.
இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் கலந்து கொண்டிருந்தார்
Related posts:
வரவு செலவு திட்டத்தில் சிறுபான்மையினருக்காக ஒலித்த குரல் டக்ளஸ் தேவானந்தா!
வவுனியா மாவட்ட அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவை இடையே காணப்படும் முரண்பாடுகளுக்கு தீர்வு – அமை...
குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாத...
|
|
|
வலி கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவ...
மக்களின் நலன்களை பாதுகாக்கும் தனித்துவமான நாடாகவே இலங்கை இருக்கும் – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவ...
கடற்றொழிலாளர்களுக்கு மின்சார படகுகள் - அடுத்தவருடம்முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் டக்ளஸ் ...


