வாழ்விடங்களில் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பண்டாரிக்குளம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
Sunday, December 19th, 2021வவுனியா, பண்டாரிக்குளம் பிரதேசத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்ற மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள அரச காணியில் முப்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், அங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தமது வாழ்விடங்களில் தாம் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்தனர். மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்ட அமைச்சர், குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து நியாயமான தீர்வினைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
முப்படைகளுக்குமான ஆளணியின்போது இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வல...
எமது அரசியல் கொள்கைக்குள் பிரிவினைக்கு இடமில்லை - டக்ளஸ் தேவானந்தா எம்.பி சுட்டிக்காட்டு!
அம்பன், அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வ...
|
|