வடமராட்சி – தென்மராட்சி பிரதேச ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் விஷேட சந்திப்பு!
Thursday, March 22nd, 2018உள்ளூராட்சி சபைகளை யார் முன்னெடுத்து நடத்த முன்வருகின்றார்களோ அவர்கள் மக்கள் நலன்களை முன்னிறுத்தி சபையை செயற்படுத்துவார்களேயானால் அவர்களுக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பதற்கு ஈழ மக்கள் ஜனநயகக் கட்சி தயாராக இருக்கின்றது என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தென்மராட்சி மற்றும் வடமராட்சி பிரதேசங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான பிரதிநிதிகள் மற்றும் பிரதேச நிர்வாக செயலாளர்களுடன் அமையவுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் முன்னகர்வுகள் தொடர்பாக கட்சியின் தொலைபேசியூடாக நடைபெற்ற விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியின் பிரதிநிதியாக உள்ளூராட்சி மன்றுக்கு செல்லும் ஒவ்வொரு பிரதிநிதியும் மக்களுக்கான சேவைகளை செய்வதில் முன்மாதிரியானவர்களாகவும் இதர தரப்பினருக்கு எடுத்துக்காட்டானவர்களாகவும் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் உடனிருந்தார்.
Related posts:
வடக்கில் கடல்வளம் சுரண்டப்ப டுகின்றது - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!
மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வனவளத் திணைக்களம் தடையாகவுள்ளது – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்...
அமையப் போகும் புதிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதி டக்ளஸ் தேவானந்தா: பிரதமர் மஹிந்தர் திட்டவ...
|
|
இனசமூகங்களிடையேயான நம்பிக்கை சிதைக்கப்படுகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவச் சான்றிதழ் பெறுவது தொடர்பில் இலகுவான ஏற்பாடு...
வவுனியா கரப்பக்குத்தி வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா? – நாட...