வடமராட்சி கடற்றொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்குமா ? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, July 9th, 2019

யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி கடற்பகுதியிலே சுழியோடி மூலமாக கடலட்டை பிடிக்கின்ற தொழிலில் பகல் வேளைகளில் ஈடுபடுவதற்கென அம் மாவட்டத்தைச் சாராத சுமார் 400 கடற்றொழிலாளர்களின் படகுகளுக்கு கடற்றொழில் திணைக்களத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேற்படி தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் இரவு வேளைகளிலும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அனுமதிக்கப்பட்ட தூரத்திற்கு செல்லாது கடற்கரையினை அண்டிய பகுதிகளிலும் தொழில் செய்து வருவதாகவும் அப்பகுதி கடற்றொழிலாளர் சங்கங்கள் முறைப்பாடு செய்துள்ளன.

மேற்படி கடலட்டைத் தொழிலில் ஈடுபடுகின்றவர்களால், தங்களது வலைகள் பாதிக்கப்படுவதாகவும், அதே நேரம் தங்களது வாழ்வாதாரமான மீன்கள் அப்பகுதிகளில் தங்காது கலைந்து செல்வதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதிக் கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் ஊடாக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலை நீடிக்குமானால், அது தேவையற்ற வகையிலான முரண்பாடுகளை இரு சமூகத்தினரிடையேயும் ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உருவாகலாம்.

எனவே, யாழ்ப்பாண மாவட்ட வடமராட்சி கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கின்ற வகையில் மேற்படி கடலட்டைத் தொழிலில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்கள் அப்பகுதிக்குள் தொழில் செய்வதைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

அதேபோன்று நாட்டின் அந்தந்த பகுதிகளின் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் அவர்களது தொழில் உபகரணங்கள் பாதிக்கக் கூடிய வகையில், வேறு பகுதிகளைச் சார்ந்த கடற்றொழிலாளர்கள் தொழில்களில் ஈடுபடுவதற்கு அனுமதிகள் வழங்காதிருக்க நடவடிக்கை எடுக்க முடியுமா?

எனது மேற்படி கேள்விகளுக்குரிய பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் பி. ஹெரிசன் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

Related posts:

வன்முறைக்கு தீர்வு காணப்பட்டதே தவிர தமிழ் மக்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்ப...
பனைசார் உற்பத்தி பொருட்களை நவீனமயப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பனை அபிவிருத்தி சபையின...
படையினருக்கு பெரும் நிதி: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒன்றுமில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!